இந்நாட்டில் எரிபொருளை விற்பனை செய்வதற்கான அனுமதியைப் பெற்றுள்ள அமெரிக்காவின் Shell-RM Parks நிறுவனம் இலங்கைக்கு
இறக்குமதி செய்யும் முதலாவது எரிபொருள் கப்பல், எதிர்வரும் 19ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என தெரிவித்துள்ளது.
உலகின் முன்னணி பெற்றோலிய நிறுவனமான ஆர்.எம் பார்க்ஸ் மற்றும் ஷெல் நிறுவனங்கள் இணைந்து, 200 பெற்றோல் நிலையங்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளன.
அந்த பெற்றோல் நிலையங்களில், சூப்பர் மார்க்கெட்டுகள், மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதிகள் உள்ளிட்ட பல வசதிகள் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.