1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அநுராதபுரம், ரம்பேவ பிரதேசத்தில் இன்று (09) அதிகாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில், மூவர் பலியாகியுள்ளதுடன், மேலும்

இருவர் காயமடைந்துள்ளனர்.

வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் மீது, கெப் ரக வாகனமொன்று மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இசை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பியவர்கள் மீதே, மேற்படி வாகனம் மோதியுள்ளது.

இதில், 16, 19 மற்றும் 21 வயதுடைய இளம் வயதினர் மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேலும் இரு பெண்கள் காயமடைந்துள்ள நிலையில், அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், ரம்பேவ மற்றும் பிஹிம்பியகொல்லாவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவருகிறது.

விபத்தை ஏற்படுத்திய கெப் ரக வாகனம், தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி