1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்காக, அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

விடுத்த அழைப்பை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.

அதன்படி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், அந்தக் கலந்துரையாடலில் ஈடுபடுவார் என்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும்  பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று, பாராளுமன்றத்திலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நடத்துவதற்கு, ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்காக, எதிர்க்கட்சிகளுக்கு உத்தியோகபூர்வ அழைப்பொன்று விடுக்கப்பட்ட நிலையில், அந்த அழைப்பை, ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் நிராகரித்துள்ள நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி