இலங்கையில் இருந்த கடைசி ஆண் வரிக்குதிரையும் இறந்துள்ளதாக, தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலை தெரிவித்துள்ளது.
அந்த வரிக்குதிரை, ரிதியகம சஃபாரி பூங்காவில் இருந்து இனப்பெருக்க செயற்பாடுகளுக்காக தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வரிக்குதிரையைக் கொண்டுவரும் போது, அதற்கு அதிக செறிவு மிக்க ஊசி செலுத்தப்பட்டமையினாலேயே அது இறந்ததாக, தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையின் பணியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.