ஒரே நிகழ்வில் பங்கேற்பதற்காக, நான்கு ஹெலிகொப்டர்களில், அரசாங்கத்தின் 4 முக்கியஸ்தர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த
சம்பவமொன்று தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றம்சுமத்தியுள்ளார்.
வவுனியாவில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விமானப் படை கண்காட்சிக்காக, அரசாங்கத்தின் நான்கு முக்கியஸ்தர்கள், நான்கு ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தி யாழ். சென்றுள்ளனர்.
“பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஷவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ன ஆகியோரே, இவ்வாறு தனித் தனி ஹெலிகொப்டர்கள் மூலம் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர்” என்று, அநுரகுமார தெரிவித்துள்ளார்.