தற்போது நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு, பாடசாலைகளில் நடத்தப்படும் இல்ல விளையாட்டுப்
போட்டிகளைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு, பாடசாலை அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மேலும், சித்திரைப் புத்தாண்டின் பின்னர் விளையாட்டு விழாக்களை நடத்துமாறு, உரிய அதிபர்களுக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.