சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், 48 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்தது.
இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக 75 வாக்குகளும் எதிராகவும் 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன. எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும், வாக்களிப்பைத் தவிர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம், கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்த நிலையில், மூன்று நாளாக இடம்பெற்றது. இந்நிலையிலேயே, இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.