ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (பொஹொட்டுவ) ஹம்பாந்தோட்டை மாவட்ட மாநாடு, தங்காலை நகர மையத்தில் நடைபெற்று வருகிறது.
மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவிக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ தலைமையில், 2024ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டுத் தொடரின் ஆரம்ப மாநாட்டில், பெருந்திரளான மக்கள் கலந்துகொள்வார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“போராட்டத்தை ஆரம்பிப்போம்” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் பேச்சாளர்களாக அக்கட்சியின் தலைவர்கள், உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
கீழே உள்ள காணொளியில் மாநாட்டை பார்க்கலாம்…