அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபாய் (3,555,488,597.00) VAT வரியை செலுத்த தவறியதாக குற்றம் சுமத்தப்பட்ட
டபிள்யூ.எம்.மெண்டிஸ் மற்றும் நிறுவனத்தின் மூன்று பணிப்பாளர்களுக்கு பிடியாணை பிறப்பிக்க, கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க நேற்று (01) உத்தரவிட்டுள்ளார்.
உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் வழங்கிய வழக்கை பரிசீலித்ததன் பின்னர், அர்ஜுன் ஜோசப் அலோசியஸ், அந்தோனி ரன்தேவ் தினேந்திர ஜோன் மற்றும் குமாரசிறி டீ சில்வா ஆகிய மூன்று பணிப்பாளர்களுக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.