இந்த நாட்களில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தை, கொழும்பு – புறக்கோட்டை மொத்த சந்தையில்
வாங்க முடியும் என, இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சீன வெங்காயத்தின் மொத்த விலை 320 ரூபாய் என்றும் அந்த வெங்காயம் நல்ல நிலையில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
இந்தியாவும் பாகிஸ்தானும் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்ததையடுத்து, இந்நாட்டில் இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
பின்னர் இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் சீனாவில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஆரம்பித்ததுடன், நேற்று (01) முதல் புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்களில், சீன பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தனர்.
இதனால், பண்டிகைக் காலங்களில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும், நுகர்வோர் தங்களுக்குத் தேவையான வெங்காயத்தை தட்டுப்பாடு இன்றி வாங்கிக் கொள்ளலாம் என்றும் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வருடம் இலங்கைக்கு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்த வர்த்தகர்கள், சுமார் 8,000 கோடி ரூபாயை சட்டவிரோத இலாபமாக ஈட்டியுள்ளனர் என்று, பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால், நேற்று (01) இது தொடர்பான அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அறிவிக்கப்பட்டது.