ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக, அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மன்றக்
கல்லூரியில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அவசர அரசியில் குழுகூட்டம் இன்று முற்பகல் இடம்பெற்றது.
இன்றைய அவசர கூட்டத்தில், கட்சியின் முன்னாள் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு, கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, இன்று (08) காலை 10 மணிக்கு அரசியல் குழுவின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், கட்சியின் சிரேஷ்ட உபதலைவருக்கு இவ்வாறு அரசியல் பீட கூட்டத்தை அழைப்பதற்கு சட்டரீதியாக எந்த தகுதியும் இல்லை என கட்சியின் பொதுச் செயலாளர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.