எதிர்வரும் திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு
எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமையை பொது விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை சற்று முன்னர் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.