தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான தீர்வு, கூட்டு ஒப்பந்தத்தில் சாத்தியப்படாததால் ஜனநாயக முறையில் இரு தரப்புக்கும்
நடுநிலையான தொழில் அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதிலும், கம்பனிகள் அலட்சியப் போக்கை பின்பற்றுவதாக தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து தொழில் அமைச்சுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள இ.தொ.கா. தலைமையகமான சௌமியபவனில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
"கம்பனிகளுக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை எடுப்பதாக இ.தொ.கா. நேற்று முன்தினம் தீர்மானம் எடுத்திருந்தது. இது தொடர்பாக இ.தொ.கா. உயர்மட்டக் குழு நேற்று இ.தொ.கா. தலைமையகத்தில் கூடி தொழிற்சங்க போராட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து தொழில் அமைச்சுடன் மீண்டும் பேச்சு நடத்தவும் தயாராவதுடன் 1,700 ரூபா சம்பள அதிகரிப்பு, கம்பனிகளும் நட்டமடையாது, தொழிலாளர்களுக்கும் நியாயமான வேதனம் கிடைக்கும். இதுவே இ.தொ.கா.வின் கணிப்பு ” என்றும் தெரிவித்தார்.