1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை கிடைத்துள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பலர் வெளிநாடு

சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் வெளிநாடு சென்றுள்ளதுடன், அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளும் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிலர் ஐரோப்பா உள்ளிட்ட தனது பிள்ளைகள் படிக்கும் நாடுகளுக்குச் சென்றுள்ளனர். மற்ற அமைச்சர்கள் வெளிநாடுகளில் இருக்கும் தங்கள் விடுமுறை இல்லங்களுக்குச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

மேலும் சில அமைச்சர்கள் இலங்கையின் நுவரெலியா மற்றும் ஏனைய பிரதேசங்களில் புத்தாண்டைக் கொண்டாட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எம்.பி.க்களுக்கு புத்தாண்டின் போது நீண்ட விடுமுறை கிடைத்துள்ள நிலையில், நாடாளுமன்றம் வரும் 24ஆம் திகதியே மீண்டும் தொடங்கவுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி