1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து 17 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தம்பக்கம் வளைத்துப் போடும் ஜனாதிபதி ரணில்

விக்கிரமசிங்கவின் முயற்சி இன்னும் வெற்றியளிக்கவில்லை எனத் தெரியவருகின்றது.

குறித்த நபர்களை ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினத்துக்கு மேடையேற்றும் நோக்கிலேயே நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. எனினும், ஓரிருவர் மாத்திரமே ஜனாதிபதி ரணிலுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

எதிரணியில் இருந்து ஆதரவு வழங்கும் உறுப்பினர்களைக் கூடிய விரைவில் வளைத்துப் போடுமாறு ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சியால் தெரிவு செய்யப்பட்டுள்ள நிறுவனம் ஆலோசனை வழங்கியுள்ளது எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், எதிரணி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் வஜிர அபேவர்தன, சாகல ரத்னாயக்க, ரவி கருணாநாயக்க ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி