எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே, சஜித் பிரேமதாச இதனைக் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஈஸ்டர் தாக்குதலின் உண்மையை வெளிக்கொணர ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் விசேட விசாரணைக் குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் புலனாய்வாளர்களைக் கொண்ட இந்த விசாரணை ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும்.
விசாரணையை வலுப்படுத்த நிரந்தர விசாரணை அலுவலகம் ஸ்தாபிக்கப்படும் எனவும், ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.