இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தயாராகி வரும் நிலையில், இந்திய உயர்ஸ்தானிகர்
சந்தோஸ் ஜா அவர்களுக்கும் பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான பெசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச் சந்திப்பு நேற்றையதினம் (26), கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பு தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், “இலங்கையின் அரசியல் முன்னேற்றங்கள் உட்பட பரஸ்பர ஆர்வமுள்ள தலைப்புகளில் சுமுகமான விவாதங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.