முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோரைப் போல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் தமிழ்
மக்களின் எதிரியாவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவருக்கு எதிராகவே வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள்.
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்கள், தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ வெற்றியடைவார்.
சஜித் பிரேமதாஸவின் ஆட்சியில் அரசியல் தீர்வு காணப்படும் என்பதுடன் அவர் எப்போதும் மக்கள் பக்கமே நிற்பார்.
அத்துடன் எந்த அரசியல் தலைவருடன் பகிரங்க விவாதத்துக்குத் சஜித் பிரேமதாஸ தயாராகவே இருக்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.