வடமேல் மாகாண ஆளுநரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி முதல், தென் மாகாண ஆளுநராகப்
பதவியேற்கவுள்ளார்.
லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, தென் மாகாணத்துக்கு இடமாற்றம் செய்யப்படுவதால் வெற்றிடமாகவுள்ள வடமேல் மாகாண ஆளுநர் பதவிக்கு, முன்னாள் அமைச்சரவை அமைச்சரான நசீர் அஹமட்டை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
இதுவரை தென் மாகாண ஆளுநராக பதவி வகித்து வந்த வில்லி கமகே ஓய்வு பெற்றதையடுத்து, தென் மாகாண ஆளுநர் பதவி வெற்றிடமானது.
இதனால், தெற்கின் ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவையும் வடமேற்கு ஆளுநராக நசீர் அஹமட்டையும் எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதியன்று ஜனாதிபதி நியமிக்கவுள்ளார் என்று, ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.