மே மாதத்துக்குள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால், 60 நாட்களுக்குள் அதாவது, 2 மாதங்களுக்குள் பொதுத் தேர்தலொன்றை நடத்த
முடியுமென்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலொன்று நடக்கப்படவுள்ள நிலையில் பொதுத் தேர்தலொன்றும் நடத்தப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டால், குறித்த காலப்பகுதிக்குள் இரண்டு தேர்தல்களையும் நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு சுமார் 50 நாட்களுக்கு பின்னர் தேர்தலை நடத்துவது அவசியமானது எனவும் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிடுகின்றார்.