ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தானே
முன்னிறுத்தப்படவுள்ளதாகக் கூறப்பட்டாலும் தாம் இன்னும் தீர்மானிக்கவில்லை என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெளியிட்ட கருத்து தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்று வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தது அவரின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம் எனவும் விஜேதாச ராஜபக்க்ஷ
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்காலத்தில் கட்சிக் கூட்டம் ஒன்று நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.