கொழும்பு 7, விகாரமஹாதேவி பூங்காவுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.
கொழும்பு 7 ஸ்ரீமத் அநாகரிக தர்மபால மாவத்தையின் ஒரு பாதையின் வழியாக இடம்பெற்ற மருத்துவ மாணவர்களின் எதிர்ப்பு ஊர்வலம் காரணமாக வாகன போக்குவரத்துக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கும், தேசிய வணிக முகாமைத்துவ பாடசாலையில் (NSBM) மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கும் எதிராக மருத்துவ பீட மாணவர்களின் நடவடிக்கைக் குழுவினால் இந்த எதிர்ப்பு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.