வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக முன்னாள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றும் (03) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரானார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக சி.ஐ.டி.யில் மைத்திரிபால சிறிசேனவிடம் இரண்டு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த மார்ச் 25 ஆம் திகதியும் முன்னாள் ஜனாதிபதியிடம் சிஐடி ஐந்து மணி நேர வாக்குமூலத்தைப் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.