எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன
பெரமுன நிறுத்தும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் நேற்று (03) இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போதைய ஜனாதிபதி இதுவரை தமது கட்சியின் ஆதரவை கோரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இதன்போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ மேலும் காத்திருக்க வேண்டும்.
கேள்வி - “பொதுஜன பெரமுனவில் இளம் தலைமைத்துவத்தை முன்வைப்பதில் நம்பிக்கை உள்ளதா?
பதில் - "இளைஞராகவோ, நடுத்தர வயதினராகவோ அல்லது வெற்றி பெறக்கூடியவராகவோ இருக்கக்கூடிய ஒரு வேட்பாளரை நாங்கள் முன்வைக்கிறோம்."
கேள்வி - நாமல் ராஜபக்க்ஷ ஜனாதிபதி வேட்புமனுவை வழங்க தகுதியானவரா? நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?
பதில் - கட்சி முடிவு செய்யும் என நான் எதிர்பார்க்கவில்லை.
கேள்வி -அவர் பொருத்தமானவரா?
பதில் - "அவர் சிறிது காலம் பொறுக்க வேண்டும்."