வீதி அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச்
செல்லும் பஸ்களுக்கான அபராதத்தை 5 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
வீதி அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களுக்கான அபராதத்தை 5 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதற்கான வரைவு போக்குவரத்து அமைச்சினால் சட்ட வரைவு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
3,200 தொலைதூர சேவை பஸ்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஒழுங்குமுறையின் கீழ் ஒழுங்குபடுத்தப்படுகின்றன, மேலும் அந்த பஸ்களுக்கு மேலதிகமாக, பயணிகள் பெரும்பாலும் வீதி அனுமதிப்பத்திரம் இல்லாத பஸ்களால் ஏற்றிச் செல்லப்படுகிறார்கள்.
குறிப்பாக வெள்ளவத்தை மற்றும் மருதானையை அண்மித்த பகுதிகளில் பஸ்களை நிறுத்தி சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்வதுடன், அவ்வாறான பல பஸ்களை கைப்பற்றி வழக்குத் தொடர தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்படும் பஸ்களுக்கான தற்போதைய அபராதம் பத்தாயிரம் ரூபாயாகும். எதிர்காலத்தில் இந்தத் தொகைாயனது ஐந்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.