கடுமையான வெப்ப நிலை காரணமாக கிழக்கு இந்தியா மிகவும்
பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெப்பமான வானிலை படிப்படியாக அதிகரிக்கும். மே மாதத்திலும், இந்தியாவின் சில பகுதிகளில் இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கிழக்கு இந்தியாவில் கடந்த ஏப்ரலில் 28.12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது, இது 1901-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்ச வெப்பநிலையாகும்.