ஹொரணை கிரேஸ்லண்ட்வத்தை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச்
சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (05) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் சொகுசு காரில் பயணித்த ஒருவர் மீதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.