ஹங்வெல்ல அரசாங்க ஊழியர் வீடமைப்புத் திட்டத் தொகுதியில் வசிக்கும் தனது
மனைவியைக் கொலை செய்வதற்காக நேற்று (05) மாலை கைக்குண்டுடன் சென்ற சட்டபூர்வ கணவர் என கூறிக்கொண்ட நபர் ஒருவர் தனது இரண்டு சிறு குழந்தைகளைப் பணயக் கைதிகளாக வைத்திருந்த நிலையில், 9 மணி நேர போராட்டத்தின் பின்னர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டனர்.
மேலும், கைக்குண்டுடன் காணப்பட்ட சந்தேக நபரும் பலத்த பிரயத்தனத்தின் பின்னர் கைது செய்யப்பட்டார்.
இரண்டு குழந்தைகளும் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்தபோது, சந்தேக நபர் அவர்களுக்கு சில தடுப்பூசிகளை செலுத்தியதால், இரண்டு குழந்தைகளையும் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
சந்தேக நபர் வைத்திருந்த கைக்குண்டை அழிப்பதற்கு வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்