கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடந்த முதலாம் திகதி கலவரமாக நடந்து
கொண்டார் எனக் கூறப்படும் சட்டத்தரணி சதரு குமாரசிங்க வாக்குமூலம் பதிவு செய்வதற்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரல் அழைக்கப்பட்டார்.
இதன்படி அவர் இன்று (6) அங்கு சென்று 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும் வாக்குமூலம் வழங்கிய பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பில் சதரு குமாரசிங்க ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கருத்துத் தெரிவிக்கையில், அன்றைய தினம் தனது ரஷ்ய காதலியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்ததாகவும், தானும் அவரும் அங்கு நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டதாகவும் தெரிவித்தார்.