மஹரகம பிரதேசத்தில் உள்ள வடிகான் ஒன்றில் சுமார் 180 கடவுச்சீட்டுகள்
அடங்கிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடவுச்சீட்டுகள் மஹரகம பிரதேசத்தில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றினால் வெளிநாடுகளில் தொழில்வாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் வெளிநாடுகளில் வேலை வழங்குவதாகக் கூறி பலரை ஏமாற்றி, சுமார் 260 கோடி ரூபா பணத்தை மோசடி செய்துவிட்டு அந்த பகுதியை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.