குளியாப்பிட்டியவில் உள்ள தனது காதலியின் வீட்டுக்குச் சென்று
காணாமல் போன 30 வயதுடைய சுசித் ஜெயவன்ச என்ற இளைஞனின் சடலம் இன்று (07) மாதம்பை காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன சம்பவம் தொடர்பில் காதலியின் உறவினர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த இளைஞனின் சடலம் பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.