தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் கைதாகி விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பிணை மனுக் கோரிக்கை மீதான தீர்மானத்தை அறிவிப்பதில்லை என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பி.எச்.சமரக்கோன் இன்று (07) தீர்மானித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் தான் ஓய்வுபெற உள்ளதால் இந்த வழக்கு தொடர்பான உத்தரவு பிறப்பிக்க போதிய அவகாசம் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.
எனவே, இது தொடர்பில் உரிய தீர்மானத்தை எடுக்குமாறும் மேல்முறையீட்டு மன்ற நீதிபதி தெரிவித்தார்.