பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசியின் மகன் நௌசர் பௌசி கொள்ளுப்பிட்டி
பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகன விபத்தில் சிக்கிய நபரை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே அவர் இன்று (07) கைது செய்யப்பட்டார்.
கொள்ளுப்பிட்டி பாடசாலை வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன்சந்தேக நபரான ஏ.எச்.எம்.பௌசியின் மகனைக் கைது செய்து பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.