அவதூறான காணொளி ஒன்றை உருவாக்கி சமூக ஊடகங்கள் ஊடாக
பரப்பிய மூவருக்கு எதிராக இராணுவத் தளபதி விக்கும் லியனகே கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தாக்கல் செய்தார்.
வழக்கறிஞர் எம். மொஹமட் பர்ஷானால் முன்வைக்கப்பட்ட இந்த வழக்கில் துஷார சாலிய ரணவக்க என்பவர் அமெரிக்காவின் யூடியூப் நிறுவனம் மற்றும் கூகுள் நிறுவனம் உள்ளிட்ட மூவர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் (சமூக ஊடகச் சட்டத்தின் கீழ்) பிரிவு 24ன் படி இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.