ஏக்கல பிரதேசத்தில் உள்ள
தொழிற்சாலை ஒன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று (07) இரவு 7 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தில் தொழிற்சாலையின் உடைமைகளுக்குச் சேதமேற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தீப்பரவலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா- எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.