22 வருடங்களாக ஒரே பஸ்ஸில் பணிபுரிந்த சாரதி ஒருவருக்கு
அந்த பஸ்ஸில் பயணித்த பயணிகள் வழங்கிய பரிசில் தொடர்பில் ஹொரவப்பொத்தான பிரதேசத்தில் அதிகமாகப் பேசப்படுகிறது.
ஹொரவப்பொத்தான இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான, படிகாரமடுவவிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் பஸ்ஸில் பணிபுரியும் சாரதி ஒருவரின் பிறந்தநாளின்போதே அவருக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டது.
அத்துடன் அவரது பிறந்தநாளை முன்னிட்டு, பஸ்ஸில் பயணித்த பயணிகள் அவருக்கு பஸ்ஸிலேயே கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சாரதியின் 56ஆவது பிறந்தநாளை முன்னிட்டே பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.