டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதன்
காரணமாக வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் பெயர் முன்மொழியப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்படவுள்ளது.
டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்ததும் தேசியப் பட்டியலில் உள்ள வெற்றிடத்தை நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பார்.
இதன்படி, வெற்றிடமாகவுள்ள தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ள பிரதிநிதி தொடர்பில் ஆணைக்குழு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிடம் வினவியதன் பின்னர், அக்கட்சியால் நியமிக்கப்படும் பிரதிநிதிகள் விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவுள்ளனர்.