மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது
கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவு தொடர்பில் நீதிமன்றத்தை விமர்சித்து நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய இரண்டு வார கால அவகாசம் வழங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றம், முறைப்பாட்டை ஜூன் 14ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு இன்று (08) உத்தரவிட்டுள்ளது.
ஊவா மாகாண ஆளுநர் மொஹமட் முஸம்மிலின் புதல்வர் ஹாடி ஜமால்தீன் தாக்கல் செய்த முறைப்பாட்டை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.