தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் முன்னாள் தலைமை நிர்வாக
அதிகாரி டாக்டர் விஜித் குணசேகர, நேற்று இரவு (08) சிஐடியினரால் கைது செய்யப்பட்டார். தரமில்லாத தடுப்பூசி இறக்குமதி விவகாரம் தொடர்பிலேயே இவர கைது செய்யப்பட்டார்.
அவரிடம் சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்தி சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ததையடுத்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரின் அழைப்பில் நேற்று காலை 9.00 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜராகிய வைத்திய கலாநிதி விஜித் குணசேகர, விசாரணை அதிகாரிகள் இரவு 9.00 மணி வரை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டார்.