முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு வெளிநாடு செல்ல
கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (09) தடை விதித்துள்ளது.
இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான வழக்கில் மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு நீதிவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவின் பிரதிகள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அலுவலகம் மற்றும் தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.