முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தகுதி நீக்கம்
செய்யப்பட்டதையடுத்து வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சற்று முன்னர் சபாநாயகர் முன்னிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்.
இன்று (10) காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற அமர்வு கூடியதன் பின்னர் பதவிப் பிரமாணம் இடம்பெற்றது.முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் மூலம் வெற்றிடமான தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்தது.
இதேவேளை, உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்ததன் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் நேற்று மாலை வெளியிடப்பட்டது.