ரஷ்ய இராணுவத்தில் வேலைக்காக குருணாகல் பிரதேசத்தில்
இலங்கையர்களைக் கடத்தியதாக கூறப்படும் மேஜர் ஜெனரல் மற்றும் சார்ஜன்ட் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளது.ரஷ்ய இராணுவத்தில் வேலைக்காக குருணாகல் பிரதேசத்தில் இலங்கையர்களைக் கடத்தியதாக கூறப்படும் மேஜர் ஜெனரல் மற்றும் சார்ஜன்ட் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளது.
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரான இவர் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இராணுவ தலைமையகத்திவிருந்து ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளின் பட்டியலை அவரால் எடுத்துச் செல்லப்பட்டதும் தெரிய வந்தது.
ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள கூலிப்படை முகாம்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் கடத்தப்படுவது குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.