ஹோமாகம நகரிலுள்ள தங்க நகைகள் விற்பனை நிலையம்
ஒன்றுக்குள் இன்று (10) பிஸ்டலுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நால்வர் 3 இலட்சம் ரூபா பணத்தையும் தங்க நகைகளையும் பெள்ளையிடடுச் சென்றுள்ளனர்.
ஹோமாகம நகரிலுள்ள தங்க நகைகள் விற்பனை நிலையம் ஒன்றுக்குள் இன்று (10) பிஸ்டலுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நால்வர் 3 இலட்சம் ரூபா பணத்தையும் தங்க நகைகளையும் பெள்ளையிடடுச் சென்றுள்ளனர்.
இவர்களால் தங்க நகைகள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளைச் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் சந்தேக நபர்கள் போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தியுள்ளதாக ஹோமாகம தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.