ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை விதித்து
கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (10) மேன்முறையீடு செய்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினரும் கலாசார அமைப்பாளருமான மொண்டேகு சரத்சந்திர தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம், கடந்த 24ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை கலைக்குமாறு கோரியே இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.
சட்டத்தரணி ஜயமுதித ஜயசூரியவினால் முன்வைக்கப்பட்ட இந்த மேன்முறையீட்டு மனுவில் பிரதிவாதி-பிரதிவாதியாக மெண்டேகு சரச்சந்திர பெயரிடப்பட்டுள்ளார்.