ஹகுரங்கெத்தவிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச்
சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று மயிலாப்பிட்டிய பிரதேசத்தில் இன்று (11) விபத்துக்குள்ளானது.
இந்தச் சம்பவத்தில் 9 பேர் காயமடைந்து கண்டி பொது வைத்தியசாலையிலும், ரிக்கிலகஸ்கட வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் அடங்குவதுடன் விபத்துக்கான காரணம் தொடர்பில் தலாத்துஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.