வெலிப்பன்ன சிறிசந்தவில் உள்ள வீடு ஒன்றிலிருந்து இரண்டு கைக்குண்டுகள்
மற்றும் ரவைகள் என்பன குழந்தைகளுக்கு பாலூட்டும் பால் போத்தல்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிப்பன்ன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மேல் மாகாண புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய வெலிப்பன்ன பொலிஸார் இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.
வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைக்குண்டுகளும் மற்றும் ரி -56 துப்பாக்கிக்கான ரவைகள் என்பனவே கைப்பற்றப்பட்டுள்ளன.