சூரியவெவ வெவெகம பிரதேசத்தில் தந்தையின் துப்பாக்கிச்
சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சூரியவெவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மதுபோதையில் காணப்பட்ட தந்தையில் தந்தை காணப்பட்ட துப்பாக்கியுடன் மகனின் வீட்டுக்கு அருகில் சென்று மகனை திட்டியுள்ளார் இதன்போது வீட்டில் பகல் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த மகன் திட்டியதற்கான காரணத்தை கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்த போது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு பாதிக்கப்பட்டவரின் இடது காலின் தொடை பகுதியில் முழங்காலுக்கு மேல் பாய்ந்தது.
துப்பாக்கிச் சூடு நடத்திய தந்தை தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.