மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள
இருதயபுரம் பகுதியில் வீதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் 58 துப்பாக்கி ரவைகளை நேற்று சனிக்கிழமை (11) இரவு கண்டெடுக்கப்பட்டதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
<span" பொலிஸாருக்குக் கிடைத்த தகவலில் நேற்றிரவு (11) இரவு இருதயபுரம் சமுர்த்தி வங்கி கட்டிடத்துக்கு அருகாமையில் வீதி ஓரத்தில் பொலித்தீன் பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் கைவிடப்பட்டிருந்த 58 ரி.56 ரக துப்பாக்கி ரவைகளையே மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பெரும் குற்றப் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.