திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி
காய்ச்சிக் கொண்டிருந்த பொதுமக்களை நீதிமன்ற தடையுத்தரவை காண்பித்து பொலிஸார் மிரட்டியதாக் கூறப்படுகிறது. சம்பவம் இன்று (12) இடம்பெற்றுள்ளது.
சேனையூர் பகுதியில் இன்று பகல் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி காய்ச்சிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவைக் காண்பித்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி தடுக்க முற்பட்டதாகவும் தெரிய வருகிறது.
இதன்போது நாங்கள் வேறு யாரையும் நினைவு கரவில்லை உயிரிழந்த பொது மக்களுக்காகவே இதனை செய்கின்றோம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு நீதிமன்ற தடை உத்தரவை மக்கள் பெற்றுக் கொள்ள மறுத்ததுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியை காய்ச்சி பொதுமக்களுக்கு பரிமாறி முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பொது மக்களை நினைவை நினைவு கூர்ந்தனர்.