15 வயதான பாடசாலை மாணவி ஒருவரை வெறிச்சோடிய
பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார் என்ற குற்றச்சாட்டில் 32 வயதுடைய பஸ் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக குளியாப்பிட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சாரதி குளியாபிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் மாணவர் சேவையில் ஈடுபடும் பஸ் ஒன்றின் உரிமையாளர் என்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இரு பிள்ளைகளின் தந்தையான சாரதி பாதிக்கப்பட்ட மாணவியுடன் காதல் உறவைப் பேணி வந்ததாகவும் பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.